2025 முதல் காலாண்டில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி சேவை வழங்குனராக ஜனசக்தி திகழ்ந்தது
நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான ஜனசக்தி லைஃப், 2025 முதல் காலாண்டில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் தேறிய கட்டுப்பண வழங்கல்களில் (GWP) 49% உயர்வை பதிவு செய்திருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1,231 மில்லியனுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ரூ. 1,830 மில்லியனை பதிவு செய்திருந்தது. வாடிக்கையாளர் கையகப்படுத்தல், சந்தை விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு புத்தாக்கம் ஆகியவற்றில் அதன் மூலோபாய நோக்கை இந்த நிதிப் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருந்தன. வழமையான…
24ஆவதுவருடமாககதிர்காமம்கிரிவெஹெரமற்றும்ருஹுணுமகாகதிர்காமதேவாலயத்தைஒளியூட்டும்சுதேசிகொஹொம்ப
2025 எசல பௌர்ணமி தினத்தையிட்டு, இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை, மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான சுதேசி இன்டஸ்ட்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி நிறுவனம் ஒளிரச் செய்தது. கொஹொம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 2025 ஜூன் 26ஆம் திகதி முதல் ஜூலை 10 ஆம் திகதி வரையான, எசல திருவிழாவையிட்டு நடத்தப்படும் இந்த ஒளியூட்டும் புண்ணிய நிகழ்விற்கு…
உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில் கொண்டாடிய வருண் பெவரஜஸ் நிறுவனம்; பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி மீது கவனம்
வருண் பெவரஜஸ் லங்கா நிறுவனம் (Varun Beverages Lanka Pvt Ltd), 2025 உலக சுற்றாடல் தினத்தை புனித செபஸ்டியன் கல்லூரியில், பல்வேறு செயல்பாடுகளுடன் கொண்டாடியது. மாணவர்களிடையே சுற்றாடல் விழிப்புணர்வை ஊக்குவித்து, பிளாஸ்டிக்கின் நிலைபேறான பயன்பாடு மற்றும் அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. இது நிறுவனம் செயற்படுத்தி வரும் சுற்றாடல், சமூக மற்றும் நிர்வாக (Environmental, Social, and Governance – ESG) இலக்குகளுடன் ஒத்துச் செல்கிறது. இந்நிகழ்வில் பிளாஸ்டிக்கை நிலைபேறான…
MTU மற்றும் DIMO இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவின் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை வலுப்படுத்துகின்றன
உயர் திறன் கொண்ட வலுசக்தி கட்டமைப்புகள் தொடர்பான, உலக சந்தையில் முன்னணியில் உள்ள வர்த்தகநாமமான MTU, இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள தமது உத்தியோகபூர்வ முகவரான DIMO உடன் இணைந்து, பிராந்திய ரீதியில் கடல் சார் மற்றும் பொறியியல் துறைகளை நவீன தீர்வுகள் மூலம் மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கின்றது. கடந்த 30 வருடங்களில் இலங்கையிலும் மாலைதீவிலும் ஒரேயொரு உத்தியோகபூர்வ MTU விற்பனை முகவராக திகழும் DIMO நிறுவனத்திடமிருந்து, இந்த இரண்டு நாடுகளிலும் 400 இற்கும் அதிகமான MTU வாடிக்கையாளர்களுக்கும்…
First Capital இனால் பட்டம்பயிலும் மாணவர்களுக்காக investED நிகழ்ச்சி முன்னெடுப்பு
ஜனசக்தி குழுமத்தின் (JXG) துணை நிறுவனமான First Capital Holdings PLC, நிதிசார் அறிவை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையில் First Capital investED எனும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த 1775 க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதிசார் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தவும், நீண்ட கால நிதிசார் பாதுகாப்பை ஏற்படுத்த முதல் படியை எடுத்து வைப்பதற்கு உதவும் வகையில் இந்தத்…
GDSA உடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி Dentistree மாநாடு 2025 இற்கான முக்கிய அனுசரணையாளராக மீண்டும் பங்கெடுக்கும் Link Natural Products (Pvt) Ltd
இலங்கையில் மூலிகை அடிப்படையிலான சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளராக விளங்கும் Link Natural Products (Pvt) Ltd (லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்) நிறுவனம், அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் (GDSA) நடாத்தும் Dentistree Congress 2025 மாநாட்டின் அனுசரணையாளராக மீண்டும் செயற்படுவதன் மூலம், நாட்டின் வாய்ச் சுகாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது. இரண்டாவது ஆண்டாக, Link Natural Products (Pvt) Ltd நிறுவனம், Dentistree Congress…
இலங்கையின்சூரியசக்திக்கானமாற்றத்திற்குவலுவூட்டசம்பத்வங்கியுடன்கூட்டணிஅமைக்கும்David Pieris Renewable Energy
டேவிட் பீரிஸ் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான David Pieris Renewable Energy (DPRE) நிறுவனம், இலங்கையில் சூரிய சக்தியை எளிதாகவும், கட்டுப்படியான விலையிலும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், சம்பத் வங்கியுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மையானது, தமது வீடுகளிலும் வணிகத்துறையிலும் சூரிய சக்தி தீர்வுகளை ஏற்படுத்த விரும்பும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும், குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த பசுமைக் கடன் வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. சம்பத் வங்கியின் நாடு முழுவதுமான வலையமைப்பு மற்றும் DPRE நிறுவனத்தின் ஆழ்ந்த…
IOM மற்றும் மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊடக பிரச்சாரத்தை ஆரம்பித்தன
மனித விற்பனைக்கு எதிரான தேசிய செயலணி (NAHTTF), புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்புடன் (IOM) இணைந்து மனித விற்பனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியான பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜப்பான் அரசாங்கத்தின் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுன் நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர் மற்றும் பாதிப்புக்குற்படக்கூடிய சமூகங்களுக்காக செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகின்றது. மனித விற்பனையின் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுவதுடன் மனித விற்பனையென்று சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு…
உலக சமுத்திர தினத்தையொட்டி கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராஜா ஜுவலர்ஸ்
இலங்கையில் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ் (Raja Jewellers), சமூக நலனுக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, அண்மையில் பாணந்துறையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. உலக சமுத்திர தினத்தினை (World Ocean Day) நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக நிறுவனத்தின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட வலுவான செயன்முறை ரீதியான, உறுதியான பங்களிப்பை பிரதிபலிக்கிறது. இந்த…
DIMO Healthcare, இலங்கையில் முதன்முறையாக Echosens FibroScan® Expert 630 கருவியை வத்தளை Hemas Hospital இல் அறிமுகப்படுத்தியுள்து
இலங்கையின் சுகாதார சேவைகள் துறையில் முன்னணியில் உள்ள DIMO Healthcare நிறுவனம், ஈரல் தொடர்பான நோய்களை கண்டறிவதில் புரட்சியை ஏற்படுத்தும் Echosens FibroScan® Expert 630 கருவியை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகத் தரம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், ஈரல் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியவும், உடனடியான கண்காணிப்பின் மூலம் அதற்கான சிகிச்சை வழங்க உதவுவதன் மூலம், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையுடனான சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது. உலகத் தரமான இந்த நவீன தொழில்நுட்பம்…