Siemens உடன் இணைந்து ஹபரணையில் இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையம் மூலம் தேசிய மின் கட்டமைப்பை பலப்படுத்தும் DIMO
தேசிய மின்சாரப் பரிமாற்ற வலையமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையத்தை (Grid Substation) ஹபரணையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக Siemens நிறுவனம் DIMO உடன் இணைந்து அறிவித்துள்ளது. ரூ. 5 பில்லியனுக்கும் அதிக மதிப்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமானது, DIMO மற்றும் Siemens இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டாண்மையின் பலத்தை எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் நாட்டின் மின்சார கட்டமைப்பின் 70% இற்கு மேலான…
புதிய கார்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்குவதன் முக்கியத்துவம்
புத்தம் புதிய காரை செலுத்துவதில் ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை உள்ளது. இது, நேர்த்தியான வடிவமைப்பையோ அல்லது சீரான செயல்திறனையோ பற்றியது மாத்திரமன்றி, திறப்பைத் திருகும் கணத்திலிருந்து, ஒவ்வொரு கிலோமீற்றரும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் முழுமையாக உங்களுக்கே சொந்தமானது என்பதையும் அறிந்துகொள்வதில் கிடைக்கும் மன அமைதியில் தங்கியுள்ளது. இதில் மறைக்கப்படும் குறைபாடுகளோ, கடந்த கால பயண தூரம் தொடர்பான கவலைகளோ இருப்பதில்லை. இந்த உறுதிப்பாடு அனைத்தும் நுகர்வோர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் இருந்து ஒரு வாகனத்தை வாங்கும் தருணத்திலிருந்து…
‘ருஹுணு வட்டம்’: இலங்கையின் தென்கரையின் கதையை சொல்லும் ஒரு புதிய அத்தியாயம்
ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், 2025 இலங்கைச் சுற்றுலா எக்ஸ்போ (Sri Lanka Tourism Expo 2025) நிகழ்வின் இறுதி நிகழ்வு மற்றும் 2025 சர்வதேச சுற்றுலாத்…
2025ஸ்ரீ லங்கா பரோமீட்டர் கருத்தாய்வு அறிக்கை வெளியீடு: நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு குறித்த புதிய கண்ணோட்டங்கள்
2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பொதுமக்கள் கருத்தாடல், கொள்கை உருவாக்கம் மற்றும் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையினை…
எதிர்கால தலைவர்களை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியை அமைக்கும் Hemas Consumer Brands (HCB) மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
இலங்கையின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னோடியாக திகழும் Hemas Consumer Brands (HCB) நிறுவனம், அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் (USJ) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்களை வேலைவாய்ப்புகளுக்காக மட்டுமன்றி, தேசிய முன்னேற்றத்திற்காகவும் நிலைபேறான வளர்ச்சியைம் உருவாக்கும் அர்த்தமுள்ள தொழில்துறையாளர்களாகவும் தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய அபிவிருத்தி குறிக்கோள்களுடன் இணைந்தவாறு, வேலைவாய்ப்புத் திறன்களை ஆதரிப்பதன் மூலம், தங்கள் துறைகளில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைக் கொண்ட இரு…
சாகசத்தை நாளாந்த வாழ்க்கைக்காக மீள்வடிவடிமைக்க, Jeep Wrangler மற்றும் Gladiator வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வரும் DIMO
இலங்கையில் ஜீப் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், அன்றாடப் பயன்பாடு மற்றும் சாகசம் மிக்க பயணங்கள் ஆகிய இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், முற்றிலும் புதிய 2025 Jeep Wrangler மற்றும் Jeep Gladiator ஆகிய வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வானது, Legends Unleashed 2025 எனும் பெயரில் மூன்று நாள் சாகசப் பயணமாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது, வாகன அறிமுகமா அல்லது அதனைப் பயன்படுத்தும் உண்மையான அனுபவமா என பங்குபற்றியோரை வியப்புக்குள்ளாக்கியது. கொழும்பில்…
GWMமற்றும்டேவிட்பீரிஸ்ஆட்டோமொபைல்ஸ்இடையேயானமூலோபாயகூட்டாண்மையை அறிவித்ததைத் தொடர்ந்து ‘Hello, to More’ஐவரவேற்கும் இலங்கை
டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் மோட்டார் வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகன நிறுவனமான GWMஇன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தராக இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கூட்டாண்மை, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம், அதிக தெரிவு, நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் புதிய மின்சார வாகனங்களை (NEVs) அறிமுகப்படுத்துகிறது. இந்த அறிமுகப்படுத்தப்பட்ட வாகன வரிசையில் HAVAL H6 ஹைப்ரிட் (HEV)…
First Capital மற்றும்Hatch இணைந்துஅறிமுகப்படுத்தும் ‘First Capital Startup Nation’
இலங்கையின் தொழில்முயற்சியாண்மை எதிர்காலத்துக்கான திறவுகோல் JXG (ஜனசக்தி குரூப்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழுமையான சேவைகள் முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, First Capital Startup Nation by Hatch எனும் நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக கைகோர்த்துள்ளது. முதலீட்டாளர்களை இலங்கையின் வளர்ந்துவரும் ஆரம்பநிலை நிறுவனங்களுடன் இணைக்கும் நிகழ்ச்சித் திட்டமாக இது அமைந்திருக்கும். இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் பொதுவான நோக்கை First Capital மற்றும் Hatch ஆகியன கொண்டுள்ளன. தொலைநோக்குடைய சிறந்த சிந்தனைகளுக்கு வலுவூட்டல்…
“தூய்மையான உற்பத்திக்கு வலுவூட்டும் சுதேசி” சூரிய மின்சக்தி கட்டமைப்பு மூலம் காபன் வெளியீட்டை குறைத்து, இலங்கையின் வலுசக்தி திறனை வலுவூட்டுகிறது
மூலிகையுடனான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி (The Swadeshi Industrial Works PLC) நிறுவனம், தமது காபன் வெளியீட்டைக் (Carbon Footprint) குறைப்பதற்காகவும், இலங்கையின் வலுசக்திக்கான ஈடுகொடுக்கும் திறனை வலுப்படுத்துவதற்காகவும் சூரிய மின்சக்தி கட்டமைப்பைப் பயன்படுத்தி தூய்மையான உற்பத்திக்கான (Cleaner Production) வலுசக்தியை வழங்க உள்ளது. சுதேசி நிறுவனம் தமது கூரை மீதான சூரிய மின்சக்தி கட்டமைப்பை செயற்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது. இது வருடாந்தம் 712,800 KWH மின்சக்தியை…
நல்லூர் திருவிழாவில் சமூக உறவுகளை வலுப்படுத்திய க்ளோகார்ட்
இலங்கையின் வடக்கில் உள்ள சிறப்பு மிக்க நகரான யாழ்ப்பாணத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் மாதத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலானது ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வண்ணமயமாக்கி, பக்தியில் திளைக்கும் ஸ்தலமாக திகழ்கின்றது. இலங்கையின் மிக முக்கியமான இந்து மத விழாக்களில் ஒன்றான நல்லூர் திருவிழா, வெறுமனே ஒரு மதத் திருவிழா என்பதனைத் தாண்டி, சுமார் ஒரு மில்லியன் பக்தர்களையும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வாகவும், சமூகம் மற்றும் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் அமைகின்றது. அந்த…