“தீவா கரத்திற்கு வலிமை” திட்டத்தை மத்திய மாகாணத்தில் ஆரம்பிப்பதன் மூலம் உலக தொழில்முனைவோர் தினத்தை கொண்டாடும் தீவா

“தீவா கரத்திற்கு வலிமை” திட்டத்தை மத்திய மாகாணத்தில் ஆரம்பிப்பதன் மூலம் உலக தொழில்முனைவோர் தினத்தை கொண்டாடும் தீவா

‘தீவா கரத்திற்கு வலிமை‘ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமான Diva (தீவா) மற்றும் Women in Management (WIM) ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்புத் திட்டமாகும். மத்திய மாகாணத்திலுள்ள 100 இற்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரின் பங்குபற்றுதலுடன், WIM இன் தலைவர் Dr. சுலோச்சனா சிகேராவினால், உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி, மாத்தளை பிரதேச செயலகத்தில் ஒரு நாள் கருத்தரங்கொன்று முன்னெடுக்கப்பட்டது. இக்கருத்தரங்கைத் தொடர்ந்து, பெண் தொழில்முனைவோரின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் தொழில் முனைவோர் திறன் குறித்த நடைமுறை அனுபவத்தை வழங்க இரண்டு நாள் பயிலரங்கமும் நடத்தப்படவுள்ளது. மிகவும் சவால் மிக்க தொழில்முனைவோர் உலகில், பெண்களை திறன்கள், அறிவு, தன்னம்பிக்கையுடன் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மிகவும் வெற்றிகரமான தொடரான தீவா கரத்திற்கு வலிமை திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகின்றது.

2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தீவா கரத்திற்கு வலிமை’ திட்டமானது, பெண்களிடையே காணப்படும் மனநிலையை மாற்றியமைத்து, அவர்கள் வெறுமனே உற்பத்தியாளர்களாக அன்றி வெற்றிகரமான தொழில்முனைவோராக பரிணமிக்க உதவுகிறது. வணிகத்தை பதிவு செய்தல், நிதி முகாமைத்துவம், விலை நிர்ணய உத்தி, வாடிக்கையாளர் பராமரிப்பு, டிஜிட்டல் சந்தைகள், சந்தைப்படுத்தல், வர்த்தகநாம பிரபலப்படுத்தல், பொதியிடல் போன்ற பல அத்தியாவசிய விடயங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த முக்கிய விடயங்களை தமது வணிகத்தில் இணைப்பதன் மூலம், பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், பெண்கள் தமது பொருளாதார நிலமைகளை கையாள தீவா வலுவூட்டுகிறது.

‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் மகத்தான வெற்றியைக் கண்டுள்ளது. இது 175 பெண்களுக்கு சொந்தமாக தொழிலை ஆரம்பிக்கவும் வளர்ச்சியடையவும் வலுவூட்டியுள்ளது. இந்த திட்டமானது, வடமேல், வடக்கு, தென், ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட 4 மாகாணங்களை உள்ளடக்கியிருந்தது. பெண் தொழில்முனைவோரை வலுவூட்டுவதில் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஐந்தாவது பகுதியாக மாத்தளை கருத்தரங்கு அமைகின்றது. இந்த திட்டத்தை பரந்துபட்ட பங்குபற்றுனர்கள் அணுகும் வகையில், கருத்தரங்கிற்கான விண்ணப்ப செயன்முறையானது பேஸ்புக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு பெண் தொழில்முனைவோரும் WhatsApp, SMS அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் தங்கள் பங்குபற்றுதலை முன்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

தீவாவின் வர்த்தகநாம நோக்கத்தின் ஒரு அங்கமான, ‘தீவா கரத்திற்கு வலிமை’ திட்டம், “தொட்டிலை ஆட்டும் கைகளே உலகையும் ஆளுகின்றன” எனும் புகழ்பெற்ற முதுமொழிக்கு அமைய வேரூன்றியுள்ளது. இது எதிர்கால தேசத்தின் சந்ததியினரை மேம்படுத்துவதில் பெண்களின் முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டுகிறது. இன்றைய பொருளாதார சவால்களை சமாளிக்கும் உறுதியுடன் இருக்கும் பெண்களுக்கு வலிமை மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நடத்தப்பட்ட 5 ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், கடந்த 2 வருடங்களில் 275 இற்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு தீவா வெற்றிகரமாக வலுவூட்டியுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் தூணாகவும் இருந்து வருகிறது.

Hemas Consumer Brands பற்றி

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்காக வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.